MM
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்துக்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டதென்று பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டு. மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும்
வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் எம்.ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த பெருந்தலைவர் அஷ்ரப் எனது தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியை ஆரம்பித்து சமூகத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் வளங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல அபிவிருத்திகளைச் செய்தார்.
ஆனால் இன்றைய தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின் கட்சியிலிருந்த சமூக சிந்தனையாளர்களை வெளியேற்றினார். அது இன்றும் தொடர்கின்றது.
சமூகத்தை விற்று அரசியல் செய்வது தவறாகும். சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் வேண்டித்தான் அரசியல் செய்ய வேண்டுமே தவிர சமூகத்தை விற்று நம்மை வளர்ப்பதற்காக அரசியல் செய்வது தவறாகும்” என்றும் கூறினார்.

No comments:
Post a Comment