Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, October 21, 2012

தொலைக்காட்சி அண்டனாவை சரிசெய்ய எத்தனித்த போது நடந்த விபரீதம்.

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் மரணமாகியுள்ளதாகவும் குறித்த பெண்ணின் பிள்ளைகள் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.


நீர்கொழும்பு – போருதொட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம் பெறறுள்ளது.

நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சீனத்துல் ஜிப்ரியா என்ற 42 வயதுடைய பெண்ணே மின்சாரம் தாக்கி மரணமானவராவார். அவரது பிள்ளைகளான முஹம்மத் மின்னார் (13வயது) மகளான பாத்திமா முனீரா ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தொலைக்காட்சி அண்டனாவை வைக்க முயன்றுள்ளான். இதன்போது அண்டனா கம்பி சரிந்து வீட்டின் முன்பாக செல்லும் மின்சார வயர்களின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்சாரம் தாக்கி சிறுவன் வீசப்பட்டு கீழே விழுந்துள்ளான். இதன்போது சிறுவனின் சகோதரியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தாயார் மகனை காப்பாற்ற ஓடி வந்து தொலைக்காட்சி அண்டனா கம்பியை தொட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே தாயார் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

No comments:

Post a Comment