Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 18, 2012

மட்டு-போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிட வருவோரின் அவல நிலை

கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் நோயாளர்களைப் பார்வையிடத் தினந்தோறும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையுள்ள மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில், நித்தவூர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற தூர இடங்களிலிருந்து வரும்
பார்வையாளர்களை வைத்தியசாலையில்
அவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்துக்குச் செல்வதற்கு கடந்த சில வாரங்களாக அனுமதிக்கவில்லை என பார்வையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காலங்காலமாக தங்குமிடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் கடந்த சில மாதங்களாக வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அவர்கள் வைத்தியசாலைக்கு வெளியில் வீதி ஓரங்களில் கொளுத்தும் வெயிலில் சிறுவர்கள்,முதியவர்கள்,வயோதிபர்கள்,கைக்குழந்தையோடு வருகின்ற தாய்மார்கள் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் நிற்கின்ற பரிதாபகரமான காட்சியை காணக்கூடியதாக உள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment