Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

முஸ்லிம் உலகம்



பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் மறுக்கலாமா? 
தனக்குப் பிடித்தவரைக் கணவனாகதேர்வு செய்ய பெண்ணிற்குஇஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடையவிருப்பமில்லாமல் நடத்தப்படும்திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான) உத்தரவுபெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்றுசொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத்தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5136)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள்.எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி (5138)
பெண்கள் விரும்பினால் அவர்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வதற்கும் பெண்களுக்கு பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் பெண்களுக்கு உரிமைஉண்டு.














வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா? 

ஆணோ பெண்ணோ பருவ வயதை அடைந்து விட்டால் அவர்கள் திருமணம் செய்யலாம். தன்னை விட வயது குறைவான பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் சட்டம் இல்லை.

ஆனால் அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு பின்னர் கவலைப்படக் கூடாது.

பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரை தான். அதன் பின்னர் அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும்.


25 வயது வாலிபன் 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப் பெண்ணை திருமணம் செய்தால் அந்தப் பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாத்தால் இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்.

தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியாவிட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை. இதனால் அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இதைக் கவனத்தில் கொண்டு தான் ஆணை விட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது.

பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சணைகள் வராமல் இருக்கும்.

மேலும் தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை மற்ற பெண்கள் நல்ல படி கவனித்துக் கொள்வார்கள். ஆனால் மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை அடைந்து விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில் பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ளது. படுக்கையில் மலஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால் பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள்.

மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

இந்த நிலையில் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் தள்ளாத வயதில் அவன் தனித்து விடப்படும் நிலை ஏற்படும். ஆனால் தன்னை விட குறைந்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும்.

இது போன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்வது நல்லது.
















ஜும்மா நேரத்தில் கடையை மூட வேண்டுமா? 

ஜும்மா நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்மா கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10


பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால் அல்லாஹ் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.
மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.
ஜும்மாவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.
நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.
நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?
நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?
நாமே செய்வதும் நம்முடைய அனுமதியில் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள்/ நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.
எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்மா பாங்கு முதல் ஜும்மா தொழுகை முடியும் வரை மூடியாக வேண்டும்.












உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லா ஏன் ?/ 
பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும்.
ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை.
ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.அந்த அனுமதி தான் பிஸ்மில்லா கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும். இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரை கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்கு கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால் தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும். இந்த உறுதி மொழி தான் லைசன்ஸ் ஆகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக்
கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெற்ற காரணத்தால் அதை அறுப்பதும் உண்பதும் குற்றமாகி விடாது.

ஒருவனுக்கு சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமயாளன். உயிருக்கு உரிமையாளணாகிய அல்லாவிடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.
பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலை எடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை. இதற்குக் காரணம் பிஸ்மில்லா தான். அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால் தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும் நினைத்து வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது.
இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லா சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.




















இஸ்லாத்தின் வழிகாட்டலை பின்பற்றும் தாய்லாந்து அமைச்சர்



ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூற
ியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டப்பட்டச் சொல்லி உள்ளூர் நிர்வாகத்தினரை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் இருந்துகொண்டு சிறுநீர் கழிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





நாஸ்திக நண்பர்களே நாசத்தைத் தவிர்ப்பீர்


மூல ஆசிரியர் : அபூஅப்தில்லாஹ்,
தமிழ் அச்சு : இக்பால் மஸ்தான்
முன்னுரை

படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. மனிதனுக்கு இந்த சிறப்பு கிடைக்கக் காரணமே அவனிடமுள்ள பகுத்தறிவாகும். மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தினால் மனிதன் புனிதனாக உயர்ந்து விடுகிறான். பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தத் தவறும் மனிதன் தன்னைவிட தாழ்ந்த மற்ற படைப்புகள் அனைத்தை விடவும் மிக இழிவானதொரு நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான்.

உலகிற்குப் பயனற்ற மனிதன், மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பிறப்பின் இலட்சியத்தை எய்துகிறான், இல்லை என்றால் அவனது பிறப்பு பயனற்றதாக மட்டுமல்ல, மீட்சியே இல்லாத நரக வேதனையைப் பெற்றுத் தருவதாக ஆகிவிடுகிறது.

பகுத்தறிவைக் கொண்டு சீர் பெற வேண்டிய மனிதன் அதே பகுத்தறிவைச் சுட்டிக் காட்டியே சீரழியும் நிலையை இன்று உலகெங்கும் பரவலாகக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் கூறும் பகுத்தறிவு உண்மையில் பகுத்தறிவே அல்ல. புலன்களைக் கொண்டு பெறப்படும் ஒரு வகை அறிவாகும் அது. உண்மையான பகுத்தறிவை முறையாகப் பயன் படுத்தும் மனிதன் மனிதப் புனிதனாக உயர்ந்துவிடுவான். தன்னையும், தன்னைப் போன்ற மனிதப் படைப்பையும் மற்றும் படைப்புகள் அனைத்தயும் படைத்த ஒரே ஒரு இறைவன் இருக்கிறான், அவனுக்கு இணையோ, துணையோ, எவ்வித தேவையோ இல்லை என்பதை அந்த பகுத்தறிவைக் கொண்டே விளங்கிக் கொள்வான்.