உலக நாடுகள் கற்றுக் கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் உதாரணமான நாடாக இலங்கை
யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாணப்பணிகள், பாதுகாப்புக் கருத்தரங்கு 2012 இல் கலந்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டன. இக் கருத்தரங்கில் புலமைபெற்ற அறிஞர்கள், இராணுவ வீரர்கள், இராணுவப்படைகளின் தலைவர்கள் மற்றும் இத் துறையில் தொடர்புடைய நிபுணர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
புனர்வாழ் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்திய மிகக் குறைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதேபோன்ற சூழ்நிலைகளை கொண்ட ஏனைய உலக நாடுகளுக்கு இலங்கையானது சரியான ஒரு பாதையை காண்பித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து பாராட்டிய நிபுணர்கள், இது போன்ற சூழ்நிலைகளைக் கொண்ட நாடுகள் இலங்கையிடம் இருந்து உதவிகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.
‘புனர்வாழ்வு மற்றும் மீள ஒன்றிணைத்தலுக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள்’ என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்காவைச் பிரதிநிதித்துவப்படுத்திய மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி. டக்லஸ் ஸ்டோன் ஆற்றிய உரை கீழ்வருமாறு