Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, August 13, 2012

ஒலுவில் பாலத்தில் வேன் வீழ்ந்து சேதம்; இருவர் காயம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள ஒலுவில் பாலத்தின் கீழ் வேன் ஒன்று பாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வோனின் சாரதியின் கவனயீனக் குறைபாட்டினால் மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி வேனைச் செலுத்தி வரும்போது அவர் கையடக்கத் தொலையில் தொடர்பு கொண்டிருந்ததாலேயே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளதாக அதை நேரில்
கண்ட சிலர் தெரிவித்தனர்.
கையடக்கத் தொலைபேசியில் பதிலளித்துக் கொண்டு வந்த வான் சாரதி திடிரென முன்னால் வந்த பாலத்தையும் வீதி வளைவையும் அவதானித்தவுடன் வேனை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியாததன் காரணத்தினால் வீதியை விட்டு பாய்ந்துள்ளது.
இதனால் சாரதிக்கும் மற்றும் ஒருவரும் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment