Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

இலங்கை நிலநடுக்க பாதிப்புகளிலிருந்து தப்பமுடியாதாம்..!

எதிர்காலத்தில் இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்ப்படலாம் என நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்து தெரிவித்துள்ளார்.


நிலநடுக்கத்தின் பாதிப்புகளில் இருந்து இலங்கை இனிமேலும் நீண்ட காலத்துக்குத் தப்பிக் கொள்ள முடியாது இலங்கையின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 – 700 கி.மீ தொல
ைவில், இந்தோ – அவுஸ்ரேலிய புவித்தட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், புதிய புதிய தட்டு ஒன்று உருவாகி வருகிறது.இதன்காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால் இலங்கையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும். என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..



ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் 1615ம் ஆண்டு பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.



அண்மைக்காலத்தில் எமது பிராந்தியத்தியத்திலும் பல நிலஅதிர்வுகளை உணர்ந்துள்ளோம். ஆனால் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.



ஆனால் எதிர்காலத்தில் கொழும்பு போன்ற நகர மையத்தின் அருகே நிலநடுக்கம் நிகழுமானால், தற்போதைய அபிவிருத்தி மற்றும் சனத்தொகையின் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ் எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment