Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, October 13, 2012

இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கு நிதியில்லை!


இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாக எஃப்.எஸ்.டி என்ற சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. 

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், ஏனைய வெடிபொருட்களையும் அகற்றுவதற்கு கொடையாளி நாடுகளே நிதியுதவியை வழங்கி வருகின்றன. 

இந்த நிதியுதவி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தடங்கலே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா உள்ளுர் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாகவும் அதுபற்றி கொடையாளி நாடுகளிடம் பேச்சு நடத்திருப்பதாகவும் எஃப்.எஸ்.டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஹார்ட்மட் தொம்ஸ் கூறுகின்றார். 

யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கண்ணிவெடி, மிதிவெடி மற்றும் அடையாளம் தெரியாத வெடிப்பொருட்களின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் எஃப்.எஸ்.டி அமைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பிபிசியிடம் பேசிய எஃப்.எஸ்.டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள நிதிச் சிக்கல் பற்றி விபரித்தார். 

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கிட்டத்தட்ட 113 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருப்பதாக ஒச்சா எனப்படும் மனிதாபினமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது. 

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் கண்ணிவெடி தொடர்பான வெடிச் சம்பவங்களில் மாத்திரம் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

(பீபீசி) 

No comments:

Post a Comment