Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, July 25, 2012

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் _

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடிவிடுமாறு அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கூறினோம்.

அத்துடன் அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் ௭ன்றனர். 
___

No comments:

Post a Comment