Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 30, 2012

கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரப் பணிகள்; முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தக் கண்டியில் ஆரம்பம்!

பரக்கத்துள்ளா



கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெள்ளியன்று தெஹியத்தக்கண்டியில் ஆரம்பம் செய்தது. இப்பிரச்சார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ், கல்முனை அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர், யடிநுவர பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடிதுவக்கு ஆகியோருடன் நீதியமைச்சரின் இணைப்பாளர் மைலால் சில்வா மற்றும் கிராமிய அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தெஹியத்தக்கண்டி, இஹலகம, மற்றும் மாவனகம ஆகிய பகுதிகளில் பிரச்சாரப் பணிகள் இடம்பெற்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் டீ.எம். ரணவீர பண்டாரவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment