Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, August 17, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 42 இலங்கை அகதிகள் சென்னையில் கைது



அவுஸ்‌திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 42 பேரை சென்னையில் பொலிஸார் கைது செய்து‌ள்ளன‌ர். 
புழல் அருகேயுள்ள ஈஞ்சங்காடு பகுதியில் உள்ள திறந்த வெளி அகதிகள் முகாமில் ஏராளமான இலங்கை அகதிகள் உள்ளனர்


இவர்களில் சிலர் அவுஸ்‌திரேலியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, கியூ பிரிவு ஆய்வாளர் உத்தமராஜன் தலைமையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வண்டலூர் அருகே இரண்டு வேன்களை மறித்து சோதனை செய்ததில் அகதிகள் இருந்தது தெரியவந்தது. 

வானில் இருந்த 26 ஆண்கள், 15 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். 

அவர்களிடம் நட‌த்த‌ப்ப‌ட்ட விசாரணையில், வேளாங்கண்ணி சென்று, அங்கிருந்து படகு மூலம் அவுஸ்‌திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது. 

தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை புதுச்சேரி வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு உதவியதாக 5 ‌தரகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட அகதிகளிடம் நடத்திய விசாரணையில், இந்திய ரூ. 2 லட்சம் பெற்றுக்கொண்டு தங்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாக தரகர்கள் கூறியதன் பேரில் தாங்கள் இங்கு வந்ததாக அவர்கள் கூறினர். 

இந்நிலையில், வண்டலூர் அருகே பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசா‌ரணை நடைபெற்று வருகிறன. 

(வெப்துனியா, தினமலர்) 

No comments:

Post a Comment