Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Tuesday, August 14, 2012

ஹக்கீம் - அதாவுல்லா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதலால் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்றில் பதற்றம்

லாபீர் அனீபா


அக்கரைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இரு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இம்மோதல் ஏற்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று வெல்ல பாதுகாப்பு வீதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தின் மீது அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 





அக்கரைப்பற்றில் வைத்து அட்டாளைச்சேனை நியாஸ் என்பவர் தாக்கப்பட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மற்றும் அட்டாளைச்சேனை சுபியான் றமீஸ், மிஸ்வர் ஆகியோர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்

அதன் பின்னர் பதற்றம் நிலவியதாகவும் அமைச்சர் ஹக்கீம் அக்கரைப்பற்று சென்று கொண்டிருந்தபோது பாதுகாப்பு பிரச்சினையால் அட்டாளச்சேனையில் இருந்துள்ளார்.

எனினும் அட்டாளச்சேனையிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாகனங்களுக்கு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தனிக்க தற்போது அங்கு பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment