Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, August 24, 2012

விமானத்தில் தூங்கிய பெண் பயணி. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தார் !


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விமானம் புறப்பட்டது. அதில் பேட்ரிஸ் கிறிஸ்டைன் அகமது என்ற பெண் பயணம் செய்தார். விமானம் பாரிஸ் சென்றது. ஆனால் பேட்ரிஸ் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளார். அதை விமான ஊழியர்களும் கவனிக்கவில்லை. மறுநாள் பாரிசில் இருந்து விமானம் மீண்டும் லாகூர் புறப்பட்டது.
அப்போது தூக்கத்தில் இருந்து விழித்தவர் அதிர்ச்சி
அடைந்தார். Ôஐயையோ நான் பாரிசில் இறங்க வேண்டும். விமானத்தை பாரிசுக்கு திருப்புங்கள்Õ என்று சத்தம் போட்டார்.

அதை கேட்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Ôவிமானத்தை மீண்டும் பாரிசுக்கு திருப்ப முடியாது. அமைதியாக உட்காருங்கள்Õ என்று ஊழியர்கள் கூறிவிட்டனர். வேறு வழியின்றி மீண்டும் லாகூர் வந்தார் பேட்ரிஸ். பாரிசில் அவர் இறங்காததை எப்படி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று தீவிர விசாரணை நடக்கிறது. முதல்கட்ட விசாரணையில் பேட்ரிஸ் தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ் தான் விமான அதிகாரிகள் கூறுகையில், அப்பெண் பயணி பாரிஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது என்றனர்.

No comments:

Post a Comment