Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, September 26, 2012

கிணற்றில் வீழ்ந்து 5 பிள்ளைகளின் தந்தை பலி: யாழில் சம்பவம்

கிணற்றில் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


சித்தங்கேணி கீரிமலை வீதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கதிர்வேலு இராசேந்திரம் (வயது 54) என்பவரே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தவராவர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment