Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, September 17, 2012

மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி கைதிகள் உண்ணாவிரதம்!


மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் சிலர் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
*மட்டக்களப்பு சிறைச்சாலையில் பேரின சமூகத்தைச் சோர்ந்த சிறைச்சாலை அதிகாரிகளை மாற்றி தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
*சிறைக்கைதிகளுக்கான சாப்பாடு சரியாக வழங்கப்படல் வேண்டும்.
*சிறைக்கைதிகளின் மருத்துவ விடயங்களில் பூரணமான அக்கறை செலுத்தப்படல் வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தில் கைதிகள் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 6 கைதிகள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் சாகும் வரை உண்ணாவிரதமாக தொடரப்போவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி அதில் இருந்தவாறு இந்த கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் அதிகாரிகள் பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

No comments:

Post a Comment