தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
தனது சகோதரரான மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ரஞ்சிதிற்கு வட மத்திய மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையினாலேயே அமைச்சர் பதவியை இராஜினாமா
செய்வதாக அவர் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை ஏக காலத்தில் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிறைவேற்றுக்குழு தெரிவித்ததாக டெய்லி மிரருக்கு எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இந்நிலையில், தனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்காக தனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment