Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, September 26, 2012

சமூகத்திற்கு ஹக்கீம் இழைத்துள்ள துரோகத்தை அடுத்த சந்ததி கூட மன்னிக்காது; அசாத் சாலி காட்டம்!


கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கிழக்குத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கேனும் செல்லாது வாக்குகளை பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக் கொள்ள வேண்டும்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார். இது ஒரு கரை படிந்த அத்தியாயமாகும். அடுத்த சந்ததி கூட இதனை மன்னிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சு பதவி வகிக்க முடியாது என்றால் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதவி விலகினால் ௭த்தனை பேர் பதவி விலக வேண்டும்.

No comments:

Post a Comment