Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 25, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் 01.11.2012 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த அதிபர் பதவிக்காக 6 அதிபர்கள்
விண்ணப்பித்துள்ளதாகவும், மிகவிரைவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் கடந்த 2012.08.
31 ஆம் திகதி மாகாண கல்விப்பணிப்பாளரினால் பத்திரிகைகளில் வெளிப்படையாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு அதிபர் தரம் 1 சேர்ந்த ஒருவரே விண்ணப்பிக்கக்கூடியதாகவும்இருந்தது.

இதற்காக விண்ணப்பித்திருந்த தரம் ஒன்றையுடைய விண்ணப்பதாரிகள் கடந்த 2012.09.24 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார அவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அந்நேர்முகப்பரீட்சை தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 2012.10.24 திகதி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும்,அதுவும் இறுதி வேளையில் ஒத்திவைக்கப்பட்டே தற்போது வரும் 01.11.2012 வியாழக்கிழமை இந்த நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment