பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு பாராளு மன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்ற உரிமையுள்ளது. தமிழில் உரையா ற்றாது சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் கொடுக்க முடியாதென ஐ. ம. சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக ஐ. தே. க. எம். பி. கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல
வாய்மூல விடைக்காக ஐ. தே. க. எம். பி. கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல
் அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தமிழில் பதிலளித்தார்.
ஆனால், சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க எம்.பி. கூறினார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ. எச்.எம். அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது.
இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என்றார்.
இங்கு மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமபத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த எம். பி. கூறினார்.
ஆனால், சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க எம்.பி. கூறினார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ. எச்.எம். அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது.
இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என்றார்.
இங்கு மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமபத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த எம். பி. கூறினார்.

No comments:
Post a Comment