கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புசல்லாவ பகுதி தோட்டத்தில் 51 வயது நபரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
2008 ஓகஸ்ட் 29ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலத்தில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்தார்.
இதன்படி கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment