Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் சற்றுமுன் கலவரத்துக்கு காரணமானவர்கள் இருவரும் பலி. (படங்கள்)


வெலிக்கடை சிறைச்சாலையினுள்  இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் என கருதப்படும் கைதிகளான மஹரகமவைச் சேர்ந்த களு துஷார மற்றும்
தொட்டலங்கவைச் சேர்ந்த கபில ஆகியோரும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை , சிறை மோதலின்போது தப்பிச் சென்ற இரு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற நான்கு கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளை களவாடிக்கொண்டு எந்த கைதியும் தப்பிச் செல்லவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறை கைதிகளால் எடுக்கப்பட்ட 5 துப்பாக்கிகளை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக சந்திரசிறி கஜதீர கூறினார்.
மேலும்,இராணுவ கொமாண்டோக்களின் அதிரடி நடவடிக்கையின் மூலம் இன்று அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 60 ஆகவும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment