Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, August 25, 2012

மிருகபலி பூஜையை தடுத்துநிறுத்த அமைச்சர் மேர்வின் தயார்..!

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மிருகபலி பூஜையை நிறுத்தவிருப்பதாக, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி இந்த பூஜை நடைபெறவிருப்பதாகவும், அன்றையதினம் தாம் அங்கு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயஙகளில் நடைபெறுகின்ற இவ்வாறான மிருகபலி ப
ூஜைகளை நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார். புத்தர் போதித்த வழிகளை பின்பற்றும் இலங்கையில் மிருக வதை இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே எதிர்வரும் முதலாம் திகதி பலியிடப்படவுள்ள மிருகங்களை ஏற்கனவே செய்தது போல, இந்த முறையும் தாம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும், எனவே அன்றைய தினம் மக்கள் எவரும்; மிருகங்களை பூஜைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment