Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 15, 2012

வெலிகமையில் முஸ்லிம் சிறுமி வெட்டிக்கொலை –


வெலிகமை கோட்டேகொட பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி மண்வெட்டியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பாத்திமா அப்ரா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு இளைஞனரொருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அப் பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறுமி இன்னுமொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் குறித்த சிறுமியை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த பின்னர் சடலத்தை வயலொன்றுக்குள் வீசியுள்ளார். இதைக் கண்ட மற்றைய சிறுமி ஓடிச் சென்ற சம்பவத்தை வீட்டில் கூறியதையடுத்தே ஊர்மக்களால் சடலம் மீட்கப்பட்டது.

கொலையாளியை பிடித்த ஊர்மக்கள், அவரை நையப்புடைத்தப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னரே கொலையாளி கொழும்பிலிருந்து வெலிகமையிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. வெலிகமை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment