Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்
தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் குறிஞ்சாமுனை கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் 18 வயதுடைய மாணவியான காணிவேல் மோகனவதனா (வாவா) என்ற மாணவி கடந்த புதன் கிழமை வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

கண்ணன் குடா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவியின் தந்தை நேற்று காலை 7 மணியளவில் வவுணதீவு பொலிஸில் முறைபாடு செய்ய சென்றபோது இரவு 9 மணிவரை காக்கவைத்து விசாரணை செய்துள்ளனர்.

இதன்பின்னர் பொலிஸார் மீது சந்தேகம் கொண்ட மாணவியின் தந்தை தன்னிடம் வந்து முறைப்பாடு செய்ததாவும் அரியநேத்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment