பிரபல செய்த்தானிய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற புத்தகம் இலங்கையில் திரைப் படமாக்கப்பட்டு இன்று The 6th London Film Festival நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு 2011மார்ச் மாதம் தொடக்கம் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது.
உலக மனித சமுகத்துக்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட இறைவனின் இறுதி தூதரையும் இஸ்லாத்தையும் கற்பனைகளை அடிப்படையாக கொண்டு விமர்சனங்கள் என்ற பெயரில் கற்பனை குப்பைகளை உலகிற்கு வழங்கிய சல்மான் ருஸ்தி எழுதிய மற்றுமொரு குப்பைதான் நடுநிசி சிறுவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது .
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது. இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக ‘நடுநிசி சிறுவர்கள்’ படத்தின் இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்திருந்தார்.
எனினும் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவை தான் தொடர்பு கொண்ட போது அவர் இரு தரப்பு விடயங்களையும் கேட்ட பின்னர் படப்பிடிப்பை தொடருமாறு கோரியதாகவும் தற்போது படமாக்கும் வேலைகள் இலங்கையில் முடிந்து விட்டதாகவும் அவர் கடந்த வருடம் மே மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் படமாக்கல் நிறைவு பெற்றுள்ளதை இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான த பிலிம் டீம் பிரைவட் லிமிட்டட் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான Film Nation கம்பெனி அனுசரணையில் இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் இரண்டு வருடங்களாக இயங்கியதுடன் பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண்,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அன்று தகவல்களை நாம் பதிவு செய்திருந்தோம் .
1990 களில் BBC நிறுவனம் இந்த கதையை தான் ஐந்து குறுந்தொடர்களாக படமாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்த படமாக்கும் வேலையை இலங்கையில் அனுமதி பெற்று தொடங்கிய நிலையில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் படமாக்க வழங்கப்பட்ட அனுமதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் மீள பெறப்பட்டது. இதை தொடர்ந்து BBC நிறுவனம் அந்த படமாக்கல் முயற்சியை கைவிட்டது .
இதை தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு பிரிட்டன் நிறுவனமான Royal Shakespeare Company மேடைகளில் பயன்படுத்தியுள்ளது. தற்போது இந்த கதையை சர்வதேச விற்பனை முகவரான Film Nation கம்பெனி அனுசரணையில் இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் இணைத்து இரண்டு வருடங்களாக படமாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
நன்றி : மெட்ரோமிரர்

No comments:
Post a Comment