Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, October 27, 2012

அதிமுகா தமிழகத்தை இருளாக்கியுள்ளது - கலைஞர்


மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாட்டை இருண்ட நாடாக மாற்றியிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார். 

இது தொடர்பாக கருணாநிதி கூறுகையில், தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசிடமிருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான வழிவகைகளை திமுக ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இப்போது ஜெயலலிதா ஆட்சியில்தான் இருக்கிறார். அவர் முதலில் அக்கறை காட்டட்டும். 

3 மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். இப்போது எத்தனை மாதங்கள் ஆகிறது. 2 மணிநேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 14 மணி நேரமாக உள்ளது. மின் வழி தடம் இல்லாதது எல்லாம் பிரச்னை இல்லை. அதிமுக ஆட்சியில் இருப்பதுதான் பிரச்னை. மத்திய அரசு மீதும், திமுக மீதும் குறை கூறி தப்பிக்கப் பார்க்கிறார். 

மின் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை என்றார் அவர். 

No comments:

Post a Comment