குருநாகல் வாவியின் பாழடைந்த இடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் குளியாபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
களுகங்கை - கெலிடோ கடற்கரைக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
60 வயதுடைய குறித்த நபரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவரின் சடலம் கருவலகஸ்வெவ - பாவட்டாமடு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
கள்ளக் காதலனுடன் இடம்பெற்ற மோதலால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment