கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் விசேட அதிரடிப் படை ஆணையாளர் ஆர். டபிள்யூ. சீ ரணவனவும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.செய்தியாளர் தெரிவித்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இருந்த ஆயுதக்களஞ்சியத்தை கைதிகள் உடைத்து அங்கிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றி, படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் தேடுதல் நடத்த முற்பட்டபோது, கைதிகளுடன் மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கைதிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர், கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரணவான, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் உள்ளிட்ட 40பேர் வரை காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கைதிகளை அடக்கும் பொறுப்பு இராணுவத்தின் சிறப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக் கூரையில் ஆயுதுங்களுடன் நிற்கும் கைதிகளை சுட்டு வீழ்த்த குறிபார்த்துச் சுடும் அணியினரும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment